சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Author: Web Desk
11ஆவது சீன-பிரிட்டன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் துவக்கம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஜூன் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
2026 சீனத் தேசிய சேவை நுகர்வு நடவடிக்கை தொடக்கம்
ஜெஜிங்யாங் மாநிலத்தன் தலைநகர் ஹாங்சோவில் 2026 சீனத் தேசிய சேவை நுகர்வு பருவம் மற்றும் ஜெஜியாங்கின் உணவு ஹாங்சோவின் சுவாரஸ்யம் என்ற தலைப்பிலான உணவுகள் [மேலும்…]
பெய்ஜிங்கின் முதல் விண்வெளி கம்ப்யூட்டிங் தொழிற்துறைப் புத்தாக்க மையம் கட்டியமைக்கப்படும்
பெய்ஜிங்கில் முதல் விண்வெளி கம்ப்யூட்டிங் தொழிற்துறைப் புத்தாக்க மையத்தின் நிறுவல் திட்டம் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெய்ஜிங் ஹைதியான் மாவட்டத்திலுள்ள பெய்ஜிங் செயற்கைக் கோள் வட்டத்தில் [மேலும்…]
23வது ஷங்கரிலா பேச்சுவார்த்தை நிறைவு
சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற 23வது ஷங்கரிலா பேச்சுவார்த்தை அண்மையில் நிறைவடைந்தது. இப்பேச்சுவார்த்தையில், உலகின் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டு, ஒரு புறம், சீனப் பிரதிநிதிகள் [மேலும்…]
சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
பெய்ஜிங் மாநகரில் ஜூன் முதல் நாள் நடைபெற்ற 5ஆவது சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் [மேலும்…]
இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை..!!
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா [மேலும்…]
சென்னை துறைமுகத்தில் சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம்
சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் [மேலும்…]
ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஜூன் 4-ஆம் தேதிக்கு [மேலும்…]
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா..!!
தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக [மேலும்…]
“திமுகவின் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம்”- வைகோ பதில்
சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்ற [மேலும்…]
