சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: இந்தியா
ரஷ்ய அதிபர் புடின் இன்று மாலை இந்தியா வருகிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பாரம்பரிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் [மேலும்…]
சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி?3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக ₹90 ஐத் தாண்டியுள்ளது. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தின் [மேலும்…]
நாட்டின் பொதுத்துறை வங்கிகளை 4 ஆக குறைக்க திட்டம் – மத்திய அரசு
நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை, 4 ஆகக் குறைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 2026 [மேலும்…]
டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் ‘SIR’ குறித்து விவாதம்
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) [மேலும்…]
‘சஞ்சார் சதி செயலியை நீக்கலாம்’: எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் தகவல்
எதிர்க்கட்சிகள் தனியுரிமை கவலைகளை எழுப்பி, சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேருடன் ஒப்பிட்டுப் பேசியதை அடுத்து, Sanchar Sathi செயலி பயனர்களுக்கு விருப்பமானது என்று மத்திய தகவல் [மேலும்…]
இனி உங்கள் ஃபோனில் Sanchar Saathi APP கட்டாயம் – மத்திய அரசு அதிரடி ஏன்?
புதியதாகத் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல்களிலும் அரசின் பாதுகாப்பு செயலியான (Sanchar Saathi) சஞ்சார் சாதி செயலியை Pre-Install செய்திருக்க வேண்டியது கட்டாயம் [மேலும்…]
#JUST IN : மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு..!
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிசம்பர் 1, 2025) தொடங்கிய நிலையில், முதல் நாளிலும் இன்றும் (டிசம்பர் 2, 2025) எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு [மேலும்…]
8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது [மேலும்…]
