நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் கோளாறு (ARI) தொடர்பான பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளை அணுகியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த அதிகரிப்புக்குக் காற்று மாசுபாடே முக்கிய காரணியாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் உள்ள ஆறு முக்கிய மத்திய அரசு மருத்துவமனைகளின் (AIIMS, RML, Safdarjung உட்பட) தரவுகள் இந்த அபாயகரமான உண்மையை வெளிப்படுத்துகின்றன.
இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,04,758 ARI வழக்குகள் பதிவாகியுள்ளன.
சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி?3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
