டிச.4ல் வெளியாகிறது திறனறித்தேர்வு முடிவுகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் நான்காம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற தேர்வை 2.36 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் இதில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

Please follow and like us:

More From Author