குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின் போது, ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார்.
இதனை வீடியோவாக பதிவு செய்து, தனது யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி நேற்று தெரிவித்தார்.
இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு
