சீனா-மத்திய ஆசிய உச்சி மாநாடு மே 18 மற்றும் 19ஆம் நாள் ஷிஆன் நகரில் நடைபெறவுள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடன் தூதாண்மை உறவைச் சீனா உருவாக்கிய கடந்த 31 ஆண்டுகளாக, இரு தரப்புறவு இடைவிடாமல் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பல துறைகளில் செழுமையான சாதனைகள் கிடைத்துள்ளன. உயிரின அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு, இச்சாதனைகளில் முக்கிய ஒன்று.
முதலாவதாக, சீன-கிர்கிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு, கிர்கிஸ்தானின் கிராமப்புறத்தில் குடிநீர் பாதுகாப்பைப் பேணிக்காத்துள்ளது. இரண்டாவதாக, ஆரல் கடல் பகுதியில் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆய்வைச் சீனாவும் உஸ்பெகிஸ்தானும் கூட்டாக மேற்கொண்டுள்ளன. மூன்றாவதாக, கசகஸ்தான் தலைநகரில் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டுமானத்துக்கு சீனா தொழில் நுட்ப ரீதியில் ஆதரவு அளித்துள்ளது. நான்காவதாக, தஜிகிஸ்தானில் சரேஸ் ஏரியைப் பாதுகாப்பதற்கு சீனாவின் தொழில் நுட்பம் ஆதரவு அளித்துள்ளது.