திருப்பதிக்கு செல்ல ஆன்லைன் டிக்கெட்கள்… தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!! 

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகை தரும் பக்தர்களின் சிரமத்தை குறைக்க தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் வெளியிட்டது. டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில், இதனை 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் கல்யாண உற்சவம் ஆர்ஜித பிரம்மோற்சவம். ஊஞ்சல் சேவை, சகஸ்ஹர தீப அலங்கார சேவை போன்ற நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் வருகின்ற 21ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து 23ஆம் தேதி அங்க பிரதட்சண டோக்கன்களும், 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட், மாலை 3 மணிக்கு வாடகை அறைகள் முன்பதிவு ஆகியவைகளும் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கடந்த மூன்று நாட்கள் தொடர் விடுமுறை தினம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 72,072 பேர் தரிசனம் செய்துள்ளனர். சுமார் 4.16 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை வசூலாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author