சீனத் தேசிய கௌரவப் பட்டம் சூட்டுதல் நிகழ்ச்சி செப்டம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தேசிய கௌரவப் பட்டம் பெறுவர்களுக்கு பதக்கங்களைச் சூட்டி, முக்கிய உரை நிகழ்த்தினார்.
தற்போது, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் என்ற பின்னணியில், வல்லரசு கட்டுமானத்தை முழுமையாக விரைவுபடுத்தி, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியை வலுப்படுத்தும் முக்கிய காலக்கட்டமாகும். முழு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதும், நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள் ஆகியவை, வீரர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன், இன்னல்களைச் சமாளித்து, செழுமையான தேசத்தைக் கட்டியமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.