ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை  

Estimated read time 1 min read

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஆரம்பகால போக்குகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஹரியானாவில் கிட்டத்தட்ட பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கக் தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) கூட்டணி அமோகமாக முன்னிலை வகிக்கிறது. முன்னதாக,
ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ஜம்மு காஷ்மீரில் என்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போதைய சூழல் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author