பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்வச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று மகாரதம் எனப்படும் தேரில் மலையப்ப சுவாமி வலம் வந்தார்.

பக்தர்கள், “கோவிந்தா கோவிந்தா” என கோஷம் எழுப்பியபடி தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த ரத உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author