சீன-ஜெர்மனி பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்ச்சி மியூனிகில் நடைபெற்றது

சீன-ஜெர்மனி பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்ச்சி மியூனிகில் நடைபெற்றது

ஆக்டோபர் 11ஆம் நாள் சீன-ஜெர்மனி தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 52ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். சீன ஊடகக் குழுமத்தால் நடத்தப்பட்ட சீன-ஜெர்மனி அனைத்து துறை நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவுக்கான மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நிகழ்ச்சி அன்று மியூனிக் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் துணை தலைவர் சின்பௌ அம்மையார் இதில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், இவ்வாண்டு சீனாவும் ஜெர்மனியும் அனைத்து துறை நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவிய 10ஆவது ஆண்டு நிறைவாகும். சீன ஊடகக் குழுமம் ஜெர்மனியின் பல்வேறு துறையினருடன் இணைந்து சீனா சீர்திருத்தத்தைத் தொடர்ந்து பன்முகங்களிலும் ஆழமாக்குவதன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. நிகழ்ச்சிகளின் கூட்டு தயாரிப்பு, செய்தி ஊடக செயல்பாடு, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம் முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கவும் விரும்புகிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author