கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மிரட்டல் செய்திகள் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தனது நண்பர் ஒருவரை பழிவாங்கவே இந்த சிறுவனால் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.