சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் தேசிய நிலைப் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் பணி குறித்து முக்கிய கட்டளையிட்டார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், புதிய காலக் கட்டத்தில் தேசிய நிலை பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம், புதிய வளர்ச்சி கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது தொடர்பாக, புத்தாக்கத்தின் உயிராற்றல் மற்றும் இயக்காற்றலை வெளிக்கொணர்ந்து, புதிய வளர்ச்சி கட்டமைப்பில் ஆக்கமுடன் பங்கெடுத்து, உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பின் மூலம் ஆழமான நிலையிலான சீர்திருத்தம் மற்றும் உயர் தர வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தரக் கட்டுமானத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, சர்வதேச ஒத்துழைப்பை விரிவாக்கி, தொழிலின் உயர் தரம், பசுமைமயமாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கத்தை முன்னேற்றி, டிஜிட்டல் தொழில் மற்றும் எதிர்கால தொழிலை உருவாக்கி, நிலைமைக்கு ஏற்ப புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.