தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு சீன செயற்கை நுண்ணறிவு தொழில் நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக அண்மையில், அமெரிக்கா அறிவித்தது.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி யன் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில்
அமெரிக்கா முன்பு இருந்த தொழில் நுட்ப திறப்புவாதத்திலிருந்து தொழில் நுட்ப பாதுகாப்புவாதத்திற்கு மாறும் என்று 83.5 விழுக்காட்டினர் கவலை தெரிவித்தனர். சர்வதேச வரையறையின் மூலம், செயற்கை நுண்ணறிவு துறையிலான அறிவுசார் சொத்துரிமை சர்ச்சையைச் சமாளிக்க வேண்டும். ஒரே தரப்பு தடை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று 89.7 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
