சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 5ஆம் நாள் ஃபிஜி அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலபாலாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டுகையில், பசிபிக் தீவு நாடுகளில் நவ சீனாவுடன் தூதாண்மையுறவை நிறுவிய முதல் நாடு ஃபிஜி ஆகும். இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 49ஆண்டுகளில், சீன-ஃபிஜி உறவு பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
இரு நாட்டு மக்களுக்கான நன்மைகளை அதிகரிப்பதோடு, பிரதேசம் மட்டுமல்ல உலகின் அமைதி, நிலைப்பு மற்றும் வளர்ச்சியையும் முன்னேற்றியுள்ளது. சீன-ஃபிஜி உறவு மீது நான் பெரும் கவனம் செலுத்தி வருகிறேன்.
இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் தொடர்ச்சியான ஆரோக்கியமான நிலையான வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலும் கூடுதல் நன்மை படைக்க, அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாலபாலாவுடன் இணைந்து கூட்டாக செயல்பட நான் விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.