அடுத்த ஆண்டில் மேலும் ஆக்கப்பூர்வமான நிதி கொள்கையைச் சீனா செயல்படுத்தி, நிதி மூலவளம் மற்றும் வரவு செலவு திட்டம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, நிதி பயன்பாட்டுதிறன் மற்றும் கொள்கை பயனை உயர்த்தி, தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை மேம்படுத்துவதற்கான வலுவான உத்தரவாதத்தை வழங்கும் என்று சீன நிதி அமைச்சகம் நடத்திய சீனத் தேசிய நிதி பணிக் கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சீன நிதி அமைச்சர் லான் ஃபோ ஆன் கூறுகையில்,
முதலாவது, நிதி பற்றாக்குறை விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இரண்டாவது, மேலும் பெரிய அளவிலான அரசு கடன் பத்திரங்களை வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்றாவது, செலவு கட்டமைப்பைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும்.
நான்காவது, முக்கிய பிரதேசங்களில் ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தொடர்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்தாவது, உள்ளூர் நிதியை வலுப்படுத்தி, அடிப்படை மக்களின் வாழ்வாதாரம், ஊதியம், இயக்கச் செலவு ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.