சிட்சாங்கில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கான மீட்புப் பணி

நிலநடுக்கத்துக்குப் பின் 7ஆம் நாள் 19:00 மணி வரை, சிட்சாங்கில் அவசரகால மீட்பு பணியில் மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் 407 பேர் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 நிவாரணமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செய்யப்பட்டனர்.

காயமடைந்த மக்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்க்கையை உறுதி செய்வதற்காக, பருத்தி கூடாரங்கள், போர்வைகள், மின்னாக்கிகள், அவசர விளக்குகள் முதலிய 1 இலட்சத்து 70 ஆயிரம் தேவையான பொருட்கள் விரைந்து மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலநடுக்கத்தால் சேதமடைந்த அனைத்து சாலை பகுதிகளும் முழுமையாக சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author