மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் இயங்காது என்றாலும், பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற 2017 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தைத் தொடர அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்த இறுதிக்க முடிவு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் ஜனவரி முதல் வாரத்தில் எடுக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: தசாப்த கால வழக்கத்தை உடைக்கும் நிர்மலா சீதாராமன்!
