அமெரிக்கா சுங்க வரிப் போர் தொடுப்பதால் உள்நாட்டில் கவலை அதிகரிப்பு

Estimated read time 1 min read

அமெரிக்க புதிய அரசு பதவியேற்கவுள்ள சூழலில், புதிய சுற்று சுங்க வரி போரை அமெரிக்கா தொடுப்பது குறித்து அந்நாட்டில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது. 

உயர் சுங்க வரி கொண்டு வரும் சுமையை முக்கியமாக அமெரிக்க நுகர்வோர்கள் தாங்க வேண்டியுள்ளர் என்று 98விழுக்காடு பொருளியலாளர்கள் கருதியதாகச் சிக்காகோ பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சுங்க வரி வசூலிப்பை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் தயாரிப்புத்தொழிலின் மறுசீரமைப்பை முன்னேற்ற அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால், அந்த விளைவு மாறாகவே போனது. அமெரிக்க தயாரிப்புத் தொழில் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைப் பெரிதும் சார்ந்துள்ளது. உயர் சுங்க வரி, உற்பத்திச் செலவைப் பெரிதும அதிகரிக்கும். சர்வதேச நிதி நெருக்கடியின் போது, தயாரிப்புத் தொழில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 12விழுக்காட்டை வகித்தது. இன்று, இவ்விகிதம் 10விழுக்காடாக குறைந்துள்ளது.

மேலும், தொடர்புடைய ஆய்வின்படி, சுங்க வரி அதிகரிப்பால், அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் குறைந்தது ஒரு லட்சத்து 40ஆயிரம் முதல் 2லட்சத்து 75ஆயிரம் வரையான வேலை வாய்ப்புகளின் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும், பிற நாடுகள், அமெரிக்காவின் மீது பழிவாங்கும் சுங்க வரி வசூலினால், அமெரிக்காவின் ஏற்றுமதியும் உலக வர்த்தகத் தொகையும் குறையக் கூடும் என்று பொருளியலாளர் தெரிவித்தனர்.

சுங்க வரிப் போர் அல்லது வர்த்தக போர் தொடுப்பதில் வெற்றியாளர் எவரும் இல்லை. அமெரிக்காவின் புதிய அரசு சீனாவுடன் ஒன்றுக்கொன்று கூட்டு வெற்றி தரும் சரியான பாதைக்குத் திரும்பி இரு தரப்புக்கும் உலகத்துக்கும் நன்மை படைக்க வேண்டுமென சீனா விரும்புகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author