மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பட்ஜெட் 2025 தாக்க செய்வதற்கு முன்னதாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
8வது ஊதியக் குழுவால் அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணையத்தின் அமலாக்கம் மற்றும் காலக்கெடு தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, விரைவில் அதன் அமைப்பை மேற்பார்வையிட ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.