தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார்.
நாளை, பிப்ரவரி 6 ஆம் தேதி, கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, பிப்ரவரி 7 (வெள்ளிக்கிழமை) அன்று பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு, நெல்லையில் தங்கும் விடுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.