2032இல் பூமியைத் தாக்க வரும் விண்கல்; வானியலாளர்கள் கணிப்பு  

Estimated read time 1 min read

2024 YR4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று 2032ல் பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆரம்பத்தில் நாசாவின் அட்லஸ் அமைப்பால் டிசம்பர் 2024 இல் இது கண்டறியப்பட்டது, இந்த விண்கல் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டாலும் தாக்க அபாய பட்டியலில் வைக்கப்பட்டது.
130 முதல் 300 அடி வரையிலான விட்டம் கொண்ட, 2024 YR4 டிசம்பர் 22, 2032 அன்று பூமியைத் தாக்கும் வாய்ப்பு 1% அதிகமாக உள்ளது.
இது தற்போது Torino Impact Hazard Scale இல் 3 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கேல் 0 முதல் (அச்சுறுத்தல் இல்லை) 10 வரை (பேரழிவு) மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author