மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கை ஏற்கப்படாததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அவை தலைவரால், எதிர்க்கட்சிகளின் விவாத கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவை நடவடிக்கையை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை குழு தலைவர்கள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.