ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, மார்ச் 15 முதல் டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செயலாக்குவது போன்ற சேவைகளை பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுத்துகிறது.
கடுமையான விதி மீறல்களைக் காரணம் காட்டி, ஜனவரி 31 அன்று Paytm Payments Bank மீது ரிசர்வ் வங்கி இக்கட்டுப்பாடுகளை விதித்தது.
பாம்பே பங்குச் சந்தை (பிஎஸ்இ) பங்கு வர்த்தகத்திற்காக பிரத்தியேகமாக வங்கியைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
வங்கியில் ஆயிரக்கணக்கான கணக்குகள் முறையான அடையாளம் இல்லாமல் திறக்கப்பட்டதால், பணமோசடி போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம் என்ற கவலை எழுந்ததாகவும், இந்த தகவல் அமலாக்க இயக்குனரகம் (ED) மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.