Election Breaking:‌ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை…!!! 

Estimated read time 1 min read

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவானது பிற கட்சிகள் போட்டியிடவில்லை.

அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மொத்தம் 17 சுற்றுகள் நடைபெறும் நிலையில் முதல் சுற்றில் தற்போது திமுக வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். அதன்படி விசி சந்திரகுமார் 2586 ஓட்டுகளும், சீதாலட்சுமி 391 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author