மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Estimated read time 1 min read

மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புதமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வது போல, மாநில அரசுகளும் ஓவ்வொரு ஆண்டும் தங்களது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கின்றன. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். வருகிற 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் நிலையில், 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி் வேளாண் துறை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author