பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை 3.51மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 71. 91 டிகிரி கிடக்கு தீர்க்க ரேகையிலும், 34.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் இருக்கும் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவிதமான தகவலும் வெளிவரவில்லை. கடந்த மாதம் 3-ம் தேதி பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.