ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை மீட்க நடவடிக்கை – வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!

Estimated read time 0 min read

இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 22ஆம் தேடி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக தமிழக மீனவர்களை அதிக எண்ணிக்கையில கைது செய்யப்படு வருவது வருவது வருத்தமளிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினையில் விரைவில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக பாஜக மற்றும் மீனவர்கள் சார்பில் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author