உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை “இடைநிறுத்தம்” செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன்- ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் டிரம்ப் கவனம் செலுத்துவதாகவும், அந்த இலக்கை அடைய ஜெலென்ஸ்கி “உறுதியுடன்” இருக்க வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உக்ரைனுக்குள் இன்னும் அனுப்பப்படாத அனைத்து இராணுவ உபகரணங்களுக்கும் இந்த இடைநிறுத்தம் பொருந்தும் என்று மற்றொரு வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.