2024 ஆம் ஆண்டில் உலக கடல் மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது இதுவரை பதிவான வெப்பமான ஆண்டாகும்.
“பனிப்பாறைகள் போன்ற நில அடிப்படையிலான பனிக்கட்டிகளிலிருந்து உருகும் தண்ணீருடன் இணைந்து அசாதாரண அளவு கடல் வெப்பமயமாதல்” இந்த உயர்வுக்குக் காரணம் என்று இந்த அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயர்ந்து வரும் நீர் மட்டங்களைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தும் நாசாவின் பகுப்பாய்வின்படி, கடந்த ஆண்டு உலகின் கடல்கள் 0.23-இன்ச் (0.59 செ.மீ) உயர்ந்துள்ளன – இது முன்னர் கணிக்கப்பட்ட 0.17-இன்ச் (0.43 செ.மீ) உயர்வை விட அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது
