சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி வலியுறுத்தல்  

Estimated read time 1 min read

பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணம் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்பு மற்றும் ஆழமடைந்து வரும் சமூகப் பிளவுகள் என்று கூறியுள்ளார்.
ஆயுதப்படை விழாவில் பேசிய அவர், உள்நாட்டு மோதல்கள் மற்றும் வன்முறை நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துவதாக எச்சரித்தார்.
நாம் கண்ட இந்த அராஜகம் நாமே உருவாக்கியது என்று ஜெனரல் ஜமான் கூறினார்.
நீதித்துறை வழக்குகள் மற்றும் சிறைத்தண்டனைகள் காரணமாக காவல்துறை சரியாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், இதனால் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ராணுவத்தின் மீது அதிக பொறுப்பு சுமத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author