துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 252 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி நிதானமாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றாலும், வில் யங் 15 ரன்களில் வருண் சக்ரவர்த்தியிடம் அவுட்டானார்.
வில் யங் அவுட்டான உடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், கேன் வில்லியம்சன் 11 ரன்களிலும் குல்தீப் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.
CT 2025 இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்கு
