புதுச்சேரி சட்டப்பேரவை துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடக்கம்!

Estimated read time 1 min read

துணைநிலை ஆளுநர் உரையை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், 2024-25ம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாரளிக்க, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் உரையையடுத்து, சட்டப்பேரவை, நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author