இவ்வாண்டு, சீன-வங்காள தேசத்தின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவு மற்றும் சீன-வங்காள தேச மனித தொடர்பு ஆண்டாகும்.
சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்காளத் தேச தற்காலிக அரசின் முதன்மை ஆலோசகர் முகமது யுனூஸ், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், வங்காளத் தேசமும் சீனாவும் நண்பர்களாகும். இரு நாட்டின் நட்புறவை, புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வங்காளத் தேசம் விரும்புகிறது. அதனால், மக்கள், மொழி, பண்பாடு முதலிய துறைகளின் தொடர்பு மிகவும் முக்கியமானது. வங்காளத் தேசத்தில் சீனப் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க முன்மொழிந்தேன் என்று தெரிவித்தார்.
சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிட்ட முதலாவது தென்னாசிய நாடு, வங்காளத் தேசம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, இப்பிரதேசங்களின் நெடுகிலும் மக்களுக்கு நலன் தந்துள்ளது. இம்முன்மொழிவில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றும் யுனூஸ் குறிப்பிட்டார்.