படை மற்றும்  மக்களிடையே உள்ள ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்: ஷிச்சின்பிங்

சீனாவில் படையினர் மற்றும் பொது மக்களுக்கிடையே ஆதரவை முன்னேற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான பாராட்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், படை மற்றும் அரசிடையே உள்ள  ஒற்றுமையையும், படை மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையையும் வலுப்படுத்த வேண்டுமென சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் உத்தரவிட்டார்.

மேலும், அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பன்முக தலைமையில் ஊன்றி நின்று புத்தாக்கம் மற்றும் சீர்திருத்தத்தை ஆழமாக்கி கொள்கை மற்றும் அமைப்பு முறையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author