மே 2ஆம் நாள், சீனாவில் உலக உழைப்பாளர் தினத்துக்கான விடுமுறையின் 2வது நாளாகும். நேற்று, தொடர்வண்டி மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை புதிய சாதனையை எட்டியது. இன்று, குறுகிய தூரப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிட அளவில் அதிகரித்துள்ளது.
தரவுகளின்படி, மே முதல் நாள், சீனாவில் தொடர்வண்டி மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் 2 கோடியே 31 லட்சத்து 19 ஆயிரத்தை எட்டி, சாதனை படைத்தது. 2ஆம் நாள், இந்த எண்ணிக்கை 1 கோடியே 93 லட்சமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடளவில் உயர் வேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை தினமும் 5 கோடியே 50 லட்சத்தைத் தாண்டக்கூடும் என்றும், விமானங்களின் மூலம் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 60 ஆயிரத்தை எட்டக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.