ஹைதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் நேற்று மாலை இடைவிடாது பெய்த மழைக்கு மத்தியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வடனது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, இறந்தவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவின் பல பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.