இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!! 

Estimated read time 1 min read

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

அட்டாரி- வாங்க எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும், அந்நாட்டின் வழியாக மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author