தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
இதன்படி அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் துரைமுருகனுக்கு இடையே சட்டம் மற்றும் சுரங்கத் துறைகளை மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலாகா மாற்றத்திற்கு பிறகு முன்னர் சட்டத்துறையை வகித்த அமைச்சர் எஸ்.ரகுபதி, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை தற்போது நீர்வளத் துறையை ஏற்கனவே மேற்பார்வையிடும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, துரைமுருகனின் முந்தைய இலாகாவான சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை, ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு
