சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

Estimated read time 0 min read

8ஆம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில்,

புத்தினின் அழைப்பை ஏற்று, ரஷியாவில் மீண்டும் பயணம் மேற்கொண்டு சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்வது மிக்க மகிழ்ச்சி என்றார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்பு போராட்டம், சோவியத் ஒன்றியத்தின் மாபெரும் தேசபக்த போர்,உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் ஆகியவை வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும்.

80 ஆண்டுகளுக்கு முன்பு, இரு நாட்டு மக்கள் உயிரிழப்பின் மூலம், மாபெரும் வெற்றி பெற்று, உலக அமைதிக்கும் மனித இலட்சியத்தின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

தற்போது, உலகளவில் மேலாதிக்கவாதத்தைச் சந்திக்கும் போது, சீனா, ரஷியாவுடன் இணைந்து, உலகின் பெரிய நாடாகவும் ஐ.நா பாதுகாப்பவை நிரந்தர உறுப்பு நாடாகவும் பொறுப்பேற்று, ஐ.நாவின் தகுநிலையைப் பேணிக்காத்து, இரு நாட்டு மற்றும் வளரும் நாடுகளின் நலனைப் பேணிக்காக்க பாடுபட விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author