கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்தா?

Estimated read time 0 min read

போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ பதிவில், இந்த அறிவிப்பு முற்றிலும் ஜோடிக்கப்பட்டதாகவும், ஆணையத்தால் வெளியிடப்படவில்லை என்றும் யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.
பார்ப்பதற்கு சரியாக இருப்பதாக தோன்றும்படி உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
எனினும், யுசிஜி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது மற்றும் துல்லியமான புதுப்பிப்புகளுக்கு அதன் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author