புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வது மற்றும் அடையாள ஆவணங்களைப் புதுப்பிப்பது ஆகிய இரண்டையும் எளிதாக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் KYC வழிகாட்டுதல்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
இந்த முயற்சி, வங்கிகள் மற்றும் NBFCகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கான செயல்பாடுகளை நெறிப்படுத்த முயல்கிறது.
இந்த புதிய மாற்றங்கள், வாடிக்கையாளர் வசதியை மையமாகக் கொண்டது.
வழக்கமான KYC புதுப்பிப்புகளுக்கு, தனிநபர்கள் விரைவில் ஒரு எளிய செல்ப்-டிக்ளரேஷன் பயன்படுத்தி தங்கள் தகவல்கள் மாறவில்லை அல்லது அவர்களின் முகவரி விவரங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க முடியும்.
பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல், மொபைல் எண்கள், ATMகள் மற்றும் ஆன்லைன் வங்கி பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேனல்கள் மூலம் இந்த அறிவிப்பைச் சமர்ப்பிக்கலாம்.
எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
