தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!! 

Estimated read time 0 min read

ஈரோட்டில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இன்று திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம்.

தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிக்கிறதை ஊக்கப்படுத்த அதற்காக இந்த திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தோளில் துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.

உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளா துணை நிற்பது நாங்கள் தான். கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

அதை எல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மதுரை மல்லிகை இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மிளகாய் மண்டலம் என்று ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author