“இந்தியா சீனா எல்லை பிரச்சனை”… 5 வருஷமாகிட்டு… இனி 3-வது நாடு தலையிடக்கூடாது… மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!!! 

Estimated read time 1 min read

மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் அவருடைய பயணத்தில், அவர் சீன அதிபர் ஜின் பிங்கை நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் எல்லை நிலைமைகள் குறித்து விரிவாக உரையாடினார்.

பின்னர், சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்கியுடன் நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, 2024 அக்டோபரில் இந்தியா-சீனா இடையே நடந்த உடன்பாட்டின் படி, டெப்சாஸ் சமவெளி மற்றும் டெம்சோ பகுதியில் இந்திய ராணுவம் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்குவது குறித்து, ஜெய்சங்கர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும், கிழக்கு லடாக்கில் 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த கர்வான் மோதலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து பேசிய ஜெய்சங்கர், இரு நாடுகளும் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். சீனா, இந்தியாவிடம் எதிர்பார்க்கும் வினியோகத் தேவைகளை பூர்த்தி செய்ய, ஏற்றுமதி தடைகளை விதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளை வரையறுப்பதில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும் கடுமையாக எடுத்துரைத்துள்ளார். இருநாட்டு தரப்பிலும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author