அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஈரான் திட்டமிட்டுள்ளது; இதனால் என்ன அச்சுறுத்தல்?  

Estimated read time 1 min read

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருவதாகவும், எனினும் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தெஹ்ரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஆனால் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும் என்று கூறினார்.
பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை மீண்டும் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பகல் நேர தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய போர் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author