9வது சீன-தெற்காசிய பொருட்காட்சி யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கியது. இவ்வாண்டில் சீனாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்ற நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.
“பொது வளர்ச்சிக்கான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு” என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்பொருட்காட்சி, தெற்காசியா நாடுகள், RCEP உறுப்பு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 1000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ கொள்முதலாளர்கள் ஈர்த்துள்ளது.
நடப்பு பொருட்காட்சியில், உற்பத்தித் தொழில் காட்சியரங்கு, பசுமை எரிசக்தி காட்சியரங்கு, நவீன வேளாண்மை காட்சியரங்கு, காப்பி தொழில் காட்சியரங்கு உள்ளிட்ட 16 காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,400க்கும் மேற்பட்ட நிறுவன கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை நடப்பு பொருட்காட்சியின் கருப்பொருள் நாடாகவும் தாய்லாந்து சிறப்பு கூட்டாளி நாடாகவும் திகழ்கிறது. இப்பொருட்காட்சி, தெற்காசிய நாடுகளின் பொருட்களுக்குச் சிறந்த காட்சி தளத்தை வழங்கியுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தெற்காசிய காட்சிக்கூடங்களில் கிட்டத்தட்ட 800 காட்சி இடங்கள் உள்ளன. இவற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மிக அதிக எண்ணிக்கையில் தலா 140 காட்சி இடங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.