2026 ஆம் ஆண்டிலிருந்து 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஆண்டிற்கு இருமுறை நடத்த CBSE ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டார்.
புதிய முறைப்படி, முதல் தேர்வு கட்டாயமாகும். இரண்டாவது தேர்வு விருப்பத்தேர்வாக இருக்கும். இதில் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பினால், இரண்டாவது அமர்வில் தேர்வு எழுதலாம். பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரை முதல் கட்ட தேர்வு நடைபெறும். இரண்டாவது கட்ட தேர்வு மே 5 முதல் மே 20 வரை நடைபெறும் என CBSE தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், மாணவர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வின் மதிப்பெண்களுடன் ஒப்பிடும் வகையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற தேர்வு மட்டுமே இறுதித் தேர்வு முடிவாக கணக்கில் எடுக்கப்படும். இதனுடன், உள் மற்றும் நடைமுறைத் தேர்வுகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கல்விமுறையை சீரமைக்க வேண்டிய தேவையை பிரதிபலிக்கிறது. கல்வித் துறையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகவும், எதிர்கால கல்வி திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது.