முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர்.
அவர்களுக்காக கடற்கரையிலுள்ள பகுதி மட்டுமே திறந்து விடப்பட்டிருந்தது.
கோவிலுக்குள் நேற்று மதியம் 12 மணிக்குப் பிறகு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள், 700 கும்பங்கள் மற்றும் 96 வகை மூலிகைகள் பயன்படுத்தப்பட்டன.