தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையம் மூலமாக அரசு வேலைகளுக்காக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொத்தம் 645 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் சார்பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
மேலும் இந்த தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.