ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்?  

Estimated read time 0 min read

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த நாள் நாடு முழுவதும் உள்ள நண்பர்களுக்கிடையேயான சிறப்புப் பிணைப்பை மதிக்க நட்பை வலுப்படுத்தவும், பரிசுகளை பரிமாறிக்கொள்ளவும், இதயப்பூர்வமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் என நட்பைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
நட்பு தினத்தின் தோற்றம், 1935 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸின் தீர்மானத்தில் இருந்து தொடங்குகிறது, அமைதி மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்காக ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை தேசிய நட்பு தினமாக அமெரிக்கா நியமித்தது.
பின்னர், ஹால்மார்க் அட்டைகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹால், வாழ்த்து அட்டைகளுடன் இந்த கருத்தை வணிகமயமாக்கினார், இது பிரபலமடைய உதவியது.

You May Also Like

More From Author